Skip to content
Home » பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

பாபநாசத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்….

  • by Senthil

பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை, ஆப்தீன் மெட்ரிகுலேசன் பள்ளி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசத்தில் நடந்த முகாமில் டாக்டர்கள் பால முருகன், சங்கீதா, சினேகா, திருக்குமரன் உட்பட பங்கேற்று 100 க்கும் மேற்ப் பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்க் கொண்டனர். இதில் வயிறு, குடல் தொடர்பான நோய்கள், பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கு பரிசோதனை, ஆலோசனை வழங்கப் பட்டது. மருந்து, மாத்திரை இலவசமாக தரப் பட்டது. இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்லம், பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி கபிலன், ரோட்டரி உதவி ஆளுநர் பிரபாகரன், பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன், செயலர் சிலம்பரசன், முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், செந்தில் நாதன், விவேகானந்தம், முருகானந்தம், பக்ருதின், மருத்துவமனை பி.ஆர்.ஓ முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!