Skip to content
Home » விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்ப மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி…..

விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்ப மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி…..

  • by Senthil

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022- 23 திட்டத்தின் கீழ் 2022 -23 ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஊராட்சியான கீழதஞ்சாவூரில் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பு பற்றிய மாவட்டத்திற்கு உள்ளான பயிற்சி இன்று நடைப்பெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கணேசன் முன்னிலை வகித்தார்.அட்மா திட்ட வட்ட தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார்.சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் கோபாலகண்ணன் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.டாக்டர்.மதிவாணன் மீன்களை மதிப்பு கூட்டுதல் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு,ராஜ்குமார் ஆகியோர் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!