Skip to content
Home » புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த பூலங்குடி காலனியை சேர்ந்தவர் அர்ஜுன்(55). இவர் புலி தோல் வைத்திருப்பதாகவும் அதனை விற்க முயல்வதாகவும்  வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்திருச்சி வன சரகர் நவீன் குமார் மற்றும் வன அலுவலர்கள் கலில் ரஹ்மான், சித்திக், கண்ணதாசன், ஆகியோர் கொண்ட குழுவினர் புலித்தோலுடன் அர்ஜூனனை பிடித்தனர். மேலும் இவரிடம் துப்பாக்கி ஒன்றும், புலித்தோலும் கைப்பற்றப்பட்டது. அர்ஜூன் பழைய வனகுற்ற வழக்கில் தேடபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!