Skip to content

வால்பாறை… நீர்வீழ்ச்சியில் வெள்ளம் …. சுற்றுலா பயணிகளுக்கு தடை

வால்பாறை அடுத்த கேரள எல்லையான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் ,தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் பிற மொழிதிரைபடங்களில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.

இது தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மக்களுக்கு அறிமுகமான நீர்வீழ்ச்சியாகும். இந்தப் பகுதியில் வால்பாறை சோலையார் அணையில் இருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் பெருக்கெடுத்து வரும் ஆற்றுத் தண்ணீர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி  வந்தடைகிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கரைபுரண்டு ஓடும் வெள்ள பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!