Skip to content
Home » லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து

லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து

  • by Senthil

கொச்சி: கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

லட்சத்தீவு  மக்களவை தொகுதியில் இருந்து  தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது பைசல்.  மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது இவருக்கும், லட்சத்தீவு முன்னாள் எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது முகமது பைசல், அவரது சகோதரர்கள் மற்றும் பலர் முகமது சலேவை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த முகமது சலே, விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து முகமது பைசல், அவரது சகோதரர்கள் உட்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கிய லட்சத்தீவு நீதிமன்றம் எம்.பி முகமது பைசலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து முகமது பைசலின்  எம்.பி. பதவியை மக்களவை செயலகம் பறித்தது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பைசல்  கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதில் அவரது தண்டனைக்கு  இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து இன்று  பைசலின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!