Skip to content
Home » பேஸ்புக் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த காதலி….

பேஸ்புக் காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த காதலி….

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரும்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகள் சரண்யா (26). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்துக்கொ்ளள ஆசையாக உள்ளது. கோபிசெட்டிபாளையம் வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபரும் பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்லியிருக்கிறார்.

இதை நம்பி இளம்பெண் சரண்யா கேரளாவில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்துள்ளார். நீண்ட நேரமாக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தும்  பேஸ்புக் காதலன் வரவில்லை. இளம்பெண் ஒருவர் பஸ் ஸ்டாண்டில்  தவித்து கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அப்பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் நடந்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது சரண்யாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் இடுக்கி மாவட்டம் பெருமேடு போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கேரள போலீசார் மற்றும் அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீஸ் ஸ்டேசனிற்கு வந்தனர். அவர்களிடம் கோபிசெட்டிபாளையம் போலீசார் இளம்பெண் சரண்யாவை ஒப்படைத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாதவர்களுடன் பழகி இது போல் ஏமாற வேண்டாம் என்று சரண்யாவுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் சரண்யாவை திருமணம் செய்ய கோபிசெட்டிபாளையம் வரவழைத்த அந்த பேஸ்புக் காதலன் யார் என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!