Skip to content
Home » வீராங்கனைகள் பாலியல் புகார்….பாஜக எம்.பியின் வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

வீராங்கனைகள் பாலியல் புகார்….பாஜக எம்.பியின் வேலைக்காரர்களிடம் போலீஸ் விசாரணை

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் வீட்டில் டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் வீட்டில் இல்லாத நிலையில் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக உ.பி.யின் கோண்டாவில் உள்ள அவரது வீட்டில் இருந்த ஊழியர்கள் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு மொத்தம் 137 பேர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!