Skip to content

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் 7-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரே ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது . இந்த ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் பம்ப் இரண்டும் அடிக்கடி பழுது ஆவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீர் ஏற்ற முடியாத சூழல் இருப்பதால் போதிய குடிநீர் கிடைக்கவில்லை. இதில் புதிய மோட்டார் மாற்றாமல் அதே மோட்டாரையே மீண்டும் மீண்டும் பழுது பார்த்து, பத்து நாளைக்கு ஒரு முறை ரிப்பேர் பார்த்து ஆழ்குழாயில் இறக்கப்படுகிறது. மீண்டும் அது ரிப்பேர் ஆகிறது. இதனால் நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்ற முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக குடிக்க குடிநீர் வராததால் பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டும் குடிநீர் வருவதாகவும், மற்ற நாட்களில் குடிநீர் இல்லாமல் அடுத்த கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழல் உள்ளதால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் – செந்துறை சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மரியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் ஜெயங்கொண்டம் – செந்துறை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இகுறித்து பகுதி மக்கள் கூறும்போது கூறும்போது,

புதுக்குடி கிராமத்தில் ஏழாவது வார்டில் 200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இங்கு ஒரே ஒரு நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தக்க தொட்டியில் பழைய மோட்டாரையே திரும்பத் திரும்ப ரிப்பேர் செய்து அதனை பொருத்துவதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே
பழைய மோட்டார் பம்பை மாற்றிவிட்டு, புதிதாக இரண்டு மோட்டார் பம்பையும் மாற்றி குடிநீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கா விட்டால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!