Skip to content
Home » கவர்னர் செய்வது அநியாயம்… ராமதாஸ் காட்டம்…

கவர்னர் செய்வது அநியாயம்… ராமதாஸ் காட்டம்…

சென்னையில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது…  தமிழக அரசு மாண்டஸ் புயலை நன்றாக கையாண்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கு கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது அநியாயம். ஆன்லைன் ரம்மி தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கத்தை அரசு அளித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தினமும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி எல்லோருக்கும் தேவையானதை கொடுக்க வேண்டும்.10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!