Skip to content
Home » இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

  • by Senthil

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்து வெள்ளியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்தநிலையில்  அப்பகுதியைசேர்ந்த ஆனந்தி என்ற பெண் வீட்டிலிருந்து பால் வாங்க கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவரது. நாய் அந்த பெண்ணின் பின்னர் சென்று-பெண்ணின்மேல் தாவி தொடைப்பகுதியை கடித்தது அப்போது அந்தப் பெண் அலறி அடித்து ஒடினார். இருப்பினும் அந்த நாய் பெண்ணை பின்தொடர்ந்து துரத்தி சென்று துப்பட்டாவை பிடித்து இழுத்து கடித்து குதிரியதுடன் அந்த பெண்னை மீண்டும் கடித்ததில் பெண்ணிற்கு பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியிலிருந்த பெண்கள் உள்ளிட்டோர் ஓடி வந்து நாயை துரத்தினர். ஆனாலும் அந்த நாய் மற்றவர்களையும் கடிக்க முற்பட்ட.து. அங்கிருந்த மூங்கில் குச்சியால் நாயை அடித்ததால் நாய் தப்பி ஓடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இங்கு ஓருவர் அந்த நாயை வளர்த்து வருகிறார். நாயை கட்டிவைக்காமல் விட்டால் இப்படித்தான் அனைவரையும் வெறி உணர்ச்சியுடன் கடிக்க வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் அந்த வெறிநாயை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். நாய்கடித்து காயம்பட்ட பெண் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!