Skip to content
Home » நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

நாய் மீது டூவீலர் மோதி திருச்சி ஆசிரியர் பலி….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு( 41). இவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 22ம் தேதி செங்குணம் வழியாக டூவீலரில் பள்ளிக்கு சென்றுள்ளார் . அப்போது செங்குணம் பிரிவு சாலை வழியாக சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே வந்த நாய் மீது டூவீலர் மோதியது. இதில் நிலை தடுமாறி டூவீலருடன் நேரு சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!