Skip to content
Home » டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

டிஜிட்டல் பேனர் வைத்த தகராறு…. அடிப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது… புகார்..

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மகிமைராஜா என்பவரது வீட்டு வாசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமண பேனர் வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பேனரை அப்புறப்படுத்தவில்லை. மகிமைராஜா பேனரை அகற்றக்கூறியுள்ளார், கேட்காததால் தம்பதியினர் பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர். இதில்  மகிமைராஜா, அவரது மனைவி கிளாடிஸ் ஆகியோர் தாக்கப்பட்டனர், அவரது வீடும் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் சமூக வன்கொடுமை சட்டத்தின்கீழ் இருவரையும் சிகிச்சையில் இருந்தவர்களைக் கைது செய்துள்ளனர்.

தம்பதியினரைத் தாக்கி அவரது வீடுகளை சேதப்படுத்திய எதிர்தரப்பினர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும், இதுநாள்வரை கைதுசெய்யவில்லை. உடனடியாக அவர்கள் கைது செய்யப்படவேண்டும், உரிய விசாரணை நடத்தி ஜாதி வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று நாடார் மக்கள் பேரவையின் தலைவர் ஏபி ராஜா தலைமையில் மயிலாடுதுறை டிஎஸ்பியிடம் புகார் அளித்தனர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி சஞ்சீவ்குமார் அளித்த உத்தரவாதத்தின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!