கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ க்கு சொந்தமான ஆல் சோர்ஸ் தேவாலயத்தில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கனவே இந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தேவாலய விதிகளுக்கு மாறாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததால் சிஎஸ்ஐ., பேராலய பிஷப் திமோத்தி ரவீந்தர் இருவரையும் பணி நீக்கம் செய்ததுடன் தேவாலயத்திற்கு உட்பட்ட குடியிருப்பையும் காலி செய்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தார். உத்தரவு பிறப்பித்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இருவரும் அங்கிருந்து வெளியேறாமல் இருந்ததுடன் தொடர்ந்து தேவாலய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக அவ்விருவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று முன்தினம் தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்துவதற்காக நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் அத்துமீறி தேவாலய பிரார்த்தனை அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த கதவுகளை உடைத்ததுடன் சிசிடிவி கேமராக்களையும் சூறையாடியுள்ளனர். மேலும் சில பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தேவாலயத்தின் செயலாளர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர் .
தேவாலயத்தில் புகுந்து கலாட்டா.. 2 பாதிரியார்கள் கைது..
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/04/பாதிரியார்கள்.jpg)