Skip to content
Home » கோவையில் பார்முலா 4 கார்பந்தயம்…அஸ்வின் தத்தா அசத்தல் வெற்றி.. வீடியோ

கோவையில் பார்முலா 4 கார்பந்தயம்…அஸ்வின் தத்தா அசத்தல் வெற்றி.. வீடியோ

  • by Senthil

கோவையில் நடைபெற்ற 25வது தேசிய பார்முலா 4 கார் பந்தயத்தில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எஃப்.எம்.எஸ்.சி.ஐ மற்றும் ஜேகே டயர் இணைந்து 25வது தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தயத்தை கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடத்தியது. சனிக்கிழமை முதல் சுற்று போட்டி நடந்தது.  நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

மைதானத்தில் அனல் பறக்கும் விதமாக நடைபெற்ற எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதில் 2 மற்றும் 3 வது ரேஸ் பந்தயங்களில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்து அசத்தினார். ஆர்யா சிங் இரண்டாம் இடத்தையும், திஜில் ராவ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதேபோல் 3வது ரேஸில் சரண் விக்ரம் மார்ஸ் 2வது இடத்தையும், ஆர்யா சிங் 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதில் 2 மற்றும் 3 வது ரேசில் முதலிடம் பிடித்த அஸ்வின் தத்தா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தில் துருவ் கோஸ்வாமி முதலிடத்தையும்,கைல் குமரன் 2வது இடத்தையும், அர்ஜூன் சியாம் நாயர் 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற ஜே.கே. டயர் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் மோட்டார் சைக்கிள் போட்டியில் சுதீர் சுதாகர் முதலிடத்தையும்,அனீஷ் ஷெட்டி 2வது இடத்தையும்,ஆல்வின் சேவியர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன்கார்த்திகேயன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!