Skip to content
Home » காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து திருநெல்வேலி-திருச்செந்தூர் ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல்லை, நாங்குநேரியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உட்பட 183 காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் குருவாயூர் அதிவிரைவு ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!