Skip to content
Home » கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….

கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….

  • by Senthil

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள லத்தேரி ரயில் நிலையம் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்நது தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்த நபர் குறித்துரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த நபர், குடியாத்தம் அருகே உள்ள  திருமணி பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகன் அருண்குமார் ( 20) என்பதும், அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரி நிர்வாகத்தினர், அருண்குமாரிடம் அவரது பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். ஆனால் அருண்குமார் பெற்றோரை அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் செல்போன் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, கல்லூரிக்கு வரும்படி கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அருண்குமார், சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் லத்தேரி பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!