Skip to content
Home » கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற முன்னாள் மாணவன்…

கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற முன்னாள் மாணவன்…

  • by Senthil

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருந்தியல் (பார்மசி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வர் விமுக்தா சர்மா ( 54). இவர் கடந்த திங்கட்கிழமை பணியை முடித்துவிட்டு கல்லூரியிலிருந்து தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது விமுக்தாவின் காரை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவன் அஷுதோஷ் சீனிவஸ்தவா (24) வழிமறித்தார்.

அஷூதோஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனைத்து தேர்விலும் தேர்ச்சியடைந்தபோதும் தேர்ச்சி மதிப்பெண்ணை கல்லூரி நிர்வாகம் வழங்காமல் தாமதித்துள்ளது. இது தொடர்பாக பல முறை கல்லூரி முதல்வர் விமுக்தாவை சந்தித்து மார்க் சான்றிதழை வழங்கும்படி அஷூதோஷ் கேட்டுள்ளார். இதனிடையே, காரில் இருந்து கீழே இறங்கிய கல்லூரி முதல்வர் விமுக்தா காரை வழிமறித்த முன்னாள் மாணவர் சீனிவஸ்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றுவிட்டதால் மதிப்பெண் சான்றிதழை தரும்படி கல்லூரி முதல்வர் விமுக்தாவிடம் அஷூதோஷ் கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. இந்த வாக்குவாதத்தில் கல்லூரி முதல்வரை தான் வைத்திருந்த பெட்ரோலை கல்லூரி முதல்வர் விமுக்தாவின் உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அலறி துடித்த கல்லூரி முதல்வரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர் . இந்நிலையில், கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த விமுக்தா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதிப்பெண் சான்றிதழ் வழங்காததால் கல்லூரி முதல்வர் விமுக்தாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த முன்னாள் மாணவன் அஷூதோஷ் சீனிவஸ்தவா மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!