Skip to content
Home » கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சக்திவேல் இவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவை தொகையை பெற்று வழங்க கையூட்டாக ரூபாய் 2000 கேட்டது தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலக அப்போதைய உதவியாளர் வேணுகோபால் என்பவர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 18.2. 2022 அன்று வடக்கு பதிவு செய்து அதன் பின்னர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டது அதில் லஞ்சம் வாங்கிய கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலக முன்னாள் உதவியாளர் வேணுகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 20000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!