Skip to content
Home » 20 நடமாடும் காய்கனி அங்காடி… முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்….

20 நடமாடும் காய்கனி அங்காடி… முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்   தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கோயம்புத்தூர், திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை

அமைச்சர்  கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!