Skip to content
Home » 17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

17வயது சிறுமியிடம் அத்துமீறல்… வாலிபருக்கு 25 ஆண்டு சிறை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் போது 2021ம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார். அப்போது அச்சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்டார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து அந்த சிறுமிக்கு கரு கலைப்பு செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து பிரவீன்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!