Skip to content
Home » ரோந்து பணியில் மாரடைப்பு….. சிதம்பரம் எஸ்.ஐ. மரணம்

ரோந்து பணியில் மாரடைப்பு….. சிதம்பரம் எஸ்.ஐ. மரணம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன்(வயது58) பணியாற்றி வந்தார்.  நேற்று இரவு இவர் ரோந்துப்பணியில்  ஈடுபட்டிருந்தார்.  சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு திடீரென இன்று அதிகாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடன் இருந்த போலீசார் அவரை  அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேந்திரன் மாரடைப்பில் இறந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!