Skip to content
Home » அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, லால்குடி அருகே உள்ள கீழவளாடியை சேர்ந்தவர் பாப்பா(60). இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் அதிக கூட்டம் இருந்துள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்ட மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். மூதாட்டியின் கழுத்தில்  இருந்த செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி லால்குடி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் செயின் பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!