Skip to content
Home » தஞ்சை அருகே கார்கள் மோதல்… திமுக நிர்வாகிகள் 2 பேர் பலி

தஞ்சை அருகே கார்கள் மோதல்… திமுக நிர்வாகிகள் 2 பேர் பலி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் எதிரே நேற்று மதியம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன்  எதிரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

விபத்தை  பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து  மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்குவந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தில்தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த முகமது சுல்தான் என்பவரின் மகன் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சேட் முகமது (60), ஊரணிபுரம் காமராஜ் நகரை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் திமுக நகர செயலாளர் சஞ்சய் காந்தி (45)  ஆகிய 2 பேரும்  சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்கள் ஒரத்தநாடு, புது விடுதி மேலத் தெருவை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சுந்தர் (45), ஊரணிபுரத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ரமேஷ், உத்தமநாதன் மகன் ராஜா (42), மற்றொரு காரை ஓட்டி வந்த டிரைவர் மன்னார்குடி மேலவாசல் சோழன் நகரை சேர்ந்த சிவபுண்ணியம் மகன் கௌதமன் (36), கோவிந்தராஜ் மகன் செல்லபாண்டியன், மன்னார்குடி ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மன்னார்குடி கூட்டுறவு சங்கத் தலைவர் வைத்தியநாதன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!