Skip to content
Home » சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

சென்னையில் இன்று இரவு பஸ்கள் ரத்து

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் (இன்று) இரவு பஸ்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் இன்றிரவு அரசுப் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!