Skip to content
Home » பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….

பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதையடுத்து பஸ் முழுவதும் தீப்பற்றியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்து பஸ்சில் இருந்து தப்பிச் சென்றனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!