Skip to content
Home » சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்ததில் தற்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்திற்கு கீழே செல்லும் படி வழி மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் இந்து அதிகாலை 2 மணியளவில் கன்னியாகுமரி நாகர் கோவிலிற்கு சுற்றுலா சென்று விட்டு மேல்மருவத்தூர் நோக்கி செல்வதற்காக வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே வந்த போது பேருந்து ஓட்டுநர் தூக்க கலகத்தில் முன் சென்ற கார் மீது மோதி மேம்பாலம் மீது ஏறி கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த 3 நபர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த 15 நபர்கள் என மொத்தம் 18 பேருக்கு

காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!