Skip to content
Home » 5-ம் வகுப்பு மாணவி முகத்தில் மை பூசி செருப்பு மாலை போட்டு ஊர்வலம்…

5-ம் வகுப்பு மாணவி முகத்தில் மை பூசி செருப்பு மாலை போட்டு ஊர்வலம்…

மத்தியபிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் விடுதியும் உள்ளது. இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த விடுதியில் ஒரு மாணவி வைத்திருந்த 400 ரூபாய் காணாமல் போனது. அதை இந்த 5-ம் வகுப்பு மாணவி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விடுதியின் பெண் காப்பாளர், 5-ம் வகுப்பு மாணவி முகத்தில் கருப்பு மையைப் பூசி செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்ற வைத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த மாணவியின் தந்தை அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் அவர் புகார் செய்தார். இதையடுத்து பெண் விடுதி காப்பாளரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிட்ட கல்வித்துறை, இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!