Skip to content
Home » ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

  • by Senthil

உபி காசியாபாத் நகரில் டில்லி-மீரட் விரைவு சாலையில் புல்லட் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தார்.  இந்நிலையில், அவர் ஒரு கையில் வண்டியை ஓட்டியபடியே மறு கையில் பீர் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். இதனை வேறொரு வாகனத்தில் வந்தவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இது போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.  இதனை தொடர்ந்து, அந்த நபரை தேடி பிடித்து, ரூ.31 ஆயிரம்

Image

அபராதம் விதித்து அதற்கான சலானை வழங்கியுள்ளனர். இதில், அந்த புல்லட் வண்டியானது அசலாத்பூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் குமாருக்கு உரியது என்பதும் வண்டியை ஓட்டியது நூர்பூரை சேர்ந்த  அனுஜ் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியதற்காகவும், ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காகவும், முன்அனுமதியின்றி விரைவாக வாகனம் ஓட்டியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அனுஜை  முசோரி போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!