Skip to content

அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

  • by Authour

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா சமீபத்தில் எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்குருக்கு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. நரசிம்ம ராவ், சரண் சிங் குடும்பத்தினர் இன்று குடியரசுத் தலைவரிடமிருந்து விருதை பெற்றுக்கொண்டனர். அதேபோல எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் விருதை பெற்றுக்கொண்டனர். கர்பூரி தாக்குருக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரது வீட்டிற்கு சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!