நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும் பட்டமங்கலத்தைச் சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் ஓசியில் மதுபானம் கேட்டு கத்தியைக் காட்டி தகாரறில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது கடையில் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி மதுபானம் கேட்டவர்களை டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வரும் தேவூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய இருவரும் மது போதை தலைக்கேறிய நிலையில் நள்ளிரவில் பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்
சென்றுள்ளனர். இதில் வீட்டின் முன்புறம் உள்ள கதவு கருகியது. இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்ததின் பேரில், DSP பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை செய்தனர். பின்னர் பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய புகழேந்திரன் மற்றும் அஜித்தை இன்று அதிகாலை கீழ்வேளூர் போலீசார் தேவூரில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.