Skip to content
Home » ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

ரிஷப் பன்டை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு விருது… உத்தரகாண்ட் முதல்வர் வழங்கினார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (25). இவர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு மெர்சிடிஸ் ரக சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார். டில்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, அன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய பண்ட்டை அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் காப்பாற்றியுள்ள விவரம் அதன்பின் தெரிய வந்தது. அரியானா போக்குவரத்து கழகத்தின் பானிபட் டெப்போவுக்கு உட்பட்ட பஸ் ஓட்டுனர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் இருவரும் அந்த வழியே சென்றுள்ளனர்.

. இதனை பார்த்த அவர்கள், காப்பாற்ற ஓடி சென்றனர். அவரை (பண்ட்) காரில் இருந்து வெளியே இழுத்தவுடன், 5 முதல் 7 வினாடிகளில் கார் தீப்பற்றி எரிந்தது. அதன்பின் கார் முழுவதும் சாம்பலானது. அவரது தனிப்பட்ட விவரம் பற்றி அவர்கள் கேட்டபோது, ரிஷப் பண்ட் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய விவரம் அவர்களுக்கு தெரிய வந்து உள்ளது. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவருக்கும் பானிபட் பஸ் டெப்போவுக்கு உட்பட்ட போக்குவரத்து துறை சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது. அவர்கள் இருவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதுபற்றி உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி செய்தியாளர்களிடம் கூறும்போது, கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய அரியானா போக்குவரத்து கழகத்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு வருகிற குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) உத்தரகாண்ட் அரசு கவுரவம் வழங்கும் என கூறினார். இதன்படி, குடியரசு தின நன்னாளில் பேருந்து ஓட்டுனரான சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் ஆகிய இருவருக்கும் மற்றும் நிஷூ, ரஜத் ஆகிய 2 பேருக்கும், ரிஷப் பண்ட்டை காப்பாற்றியதற்காக இன்று விருது வழங்கப்பட்டது. இதனை முதல்-மந்திரியிடம் இருந்து சுஷிலின் மனைவி ரீத்து மற்றும் பரம்ஜீத்தின் தந்தை சுரேஷ் குமார் பெற்று கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!