Skip to content
Home » அரியலூர் மாவட்டத்தில் மழை……

அரியலூர் மாவட்டத்தில் மழை……

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன காணப்பட்டது. நேற்று இரவு நேரத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில் 2 நாட்கள் கழித்து இன்று மீண்டும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை அதிக பனிப்பொழிவு காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் தற்பொழுது வரை விட்டுவிட்டு லேசாகவும் கனமாகவும் மாறி மாறி மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில். மழை நீர் வாய்க்காலில் ஓடி ஏரி,குளம், குட்டைகளுக்கு சென்று நிரம்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!