Skip to content
Home » அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

  • by Senthil

இந்திய தேசிய காங்கிரஸின் 138 வது துவக்க விழா நிகழ்ச்சி அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவரும் எஸ் பாலகிருஷ்ணன், பூண்டி சந்தானம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் தேசப்பதா மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர்

அமானுல்லா, மாவட்ட செயலாளர் டி செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பால சிவக்குமார், மாவட்ட தொழில் சங்க செயலாளர் ஜே பி ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பார்த்திபன், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நந்தன், நகர துணைத் தலைவர் காசி. பொன்முத்துகுமரன், நகர செயலாளர் ஆண்டனி தாஸ், நகர பொருளாளர் கே சங்கர், வார்டு தலைவர்கள் ரமேஷ், குணசேகரன், ஜோதிபாசு, கே.ரவி, நல்லதம்பி, ரெங்கராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!