Skip to content
Home » சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….

சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….

  • by Senthil

கடந்த 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுக்தியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47 போலீசாருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் இடைப்பட்ட காலத்தில் 3 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணையின் முடிவில், 43 போலீசாருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடுங்குற்றத்தை செய்ததால் ஒருவரை கொல்வது போலீசாரின் கடமை அல்ல என்றும், தவறு செய்தவர்களை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!