Skip to content
Home » திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமலிங்கம்(41). இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார். தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார்.இதனால் விரக்தி அடைந்த ராமலிங்கம் அவரது வீட்டில் சாணிபவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் அறிந்த அவரது தந்தை இது குறித்து கரூர் காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த வழக்கறிஞர் ராமலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!