Skip to content
Home » 4 கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

4 கடைகளில் பணம், செல்போன்கள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

  • by Senthil

 

திருச்சி, வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான செல்போன்கடை உள்ளது. இக்கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது எழுந்த சத்தத்தால் பொதுமக்கள் திரண்டனர் .  இதையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு அரச மரத்தடியில் உள்ள நூர் என்பவரது செல்போன் கடையில் பூட்டை உடைத்து 4 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். அதேபோல் அருகருகே உள்ள 2 செல்போன் கடைகளை உடைத்து கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர். மொத்தம் 4 செல்போன் கடைகளில் திருட்டு போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!