Skip to content
Home » 2 பொண்டாட்டிக்காரருக்கு ஏற்பட்ட விநோத சிக்கல்

2 பொண்டாட்டிக்காரருக்கு ஏற்பட்ட விநோத சிக்கல்

ஒரு பொண்டாட்டிகாரனுக்கு உரியில சோறு, 2 பொண்டாட்டிகாரனுக்கு தெருவுல சோறு என கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் உ.பி. மாநிலம் மொராதாபாத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மொராதாபாத் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.  அவருக்கு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியே சென்றார்.  இதற்கிடையே, அவருக்கு மற்றொரு  பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, தனக்கு முதல் திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பதை மறைத்து அவரை 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடன்   குடித்தனம் நடத்தி வந்தார்.

சில மாதங்களில், தனது கணவரின் முதல் திருமணம் தொடர்பாக இரண்டாவது மனைவிக்கு தகவல் தெரியவர, அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை ஏற்ற போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்ததில், கணவர் எனக்குதான் என இருவரும் காவல்நிலையத்திலேயே கட்டிபுரண்டு சண்டையிட்டனர். இதனால் மூவரையும் கவுன்சிலிங் அனுப்பிய காவல் துறையினர், பேசி முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, திங்கள் முதல் புதன் கிழமை வரை கணவர், முதல் மனைவியின் வீட்டிலேயும், வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாவது மனைவியின் வீட்டிலும் இருந்து குடும்பம் நடத்தலாம், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் கணவர் எந்த மனைவியோடு இருக்க ஆசைப்படுகிறாரோ, அம்மனைவியுடன் இருந்துகொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விசயத்திற்கு மூவரும் ஒப்புக்கொள்வதாக விருப்ப ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளது.

தனது மனைவிகளாக இருந்தாலும் ஒப்பந்தத்தை மீறி அவரால் எதுவும் செய்யமுடியாது என்பது தான் பிரச்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!