Skip to content
Home » திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

  • by Senthil

திருச்சி மாநகராட்சி   சங்கிலியாண்டபுரம் ரோடு காஜாப்பேட்டை  பகுதியில்  புதிதாக சாலை போடுவதற்காக 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. பின்னர் அந்த ஜல்லி கற்களை சாலை முழுவதும் பரப்பி விட்டனர். அதன் மேல் தார் எதுவும் ஊற்றவில்லை. ஜல்லிகற்கள் கொட்டிய நிலையில் அப்படியே  சாலை முழுவதும்  கற்கள் அப்படியே பரவி  கிடக்கிறது.

இதனால் அந்த சாலையில் நடந்தும் செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்லவும்

 

முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். குழந்தைகள் தெருக்களில் நடமாடவே முடியவில்லை. தார் போடப்படாததால் தெருவில் எப்போதும் புழுதி பறக்கிறது.  இதனால் வயதானவர்கள் தெருக்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே உடனே இந்த பகுதியில் சாலைபணியை முடிக்க வேண்டும் என  சங்கிலியாண்டபுரம், காஜப்பேட்டை  மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!