Skip to content

இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக    மின்துறை  அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி,  உலக தாய்மொழி தின  வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கருவறையில் வளரும் போதே தாய் சொல்லித் தந்த மொழி.கைக் குழந்தையாய் தவழ்கையிலே தாலாட்டாய் கேட்ட மொழி.. இந்த மண்ணிலே நமக்கென தனி அடையாளம் தந்த மொழி.. இன்னுயிரையும் ஈந்து காக்க வேண்டிய அன்னை மொழியாம் தமிழ் மொழி வாழ்க .

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

அத்துடன்   முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா,     கலைஞர் கருணாநிதி , இந்நாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  துணை முதல்வர்  உதயநிதி ஆகியோர்  தமிழ் வெல்லும், தமிழ் வாழ்க என எழுதி கையெழுத்திட்டிருப்பதையும்   அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டு   வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு என வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

 

.

error: Content is protected !!