பெரம்பலூரில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று 16/12/2023 துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் தலைமையில் உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் குறித்த கையெழுத்து இயக்கப்பிரச்சாரமும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 36 நபர்களுக்கு மாதாந்திர உதவி தொகை காண ஆணையும் வழங்கப்பட்டது .
பின்னர் சமூகங்களுடன் சேர்ந்து எச் ஐ வி எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்கிற கருப்பொருளை வலியுறுத்தும் வகையில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் / துணை சுகாதாரப் பணிகள் மருத்துவர் செ. பொற்கொடி, மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, எச்ஐவி உடன் வாழ்பவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீநாதன் , ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை திட்ட மேலாளர் மற்றும் பணியாளர்கள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு உதவியாளர்கள் , ஆலோசகர்கள், ஆய்வக நுட்புணர்கள், (நம்பிக்கை மையம் , சுகவாழ்வு மையம், ஏ.ஆர். டி. மையம், குருதி வங்கி) ஆகியோர் கலந்து கொண்டனர்.