Skip to content
Home » வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

வேலை தேடி வந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொழில்…. 2 பேர் கைது…

சென்னை கொரட்டூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், பேருந்து மூலம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கி வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்த இருவரிடம் இங்கு வேலை ஏதேனும் கிடைக்குமா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இருவரும் வீடு ஒன்றில் வீட்டு வேலை செய்ய ஆள் வேண்டும் என கூறி அந்த இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர்.

வீட்டு வேலை என கூறி அங்குள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்ற கார்த்திக், மௌலி மற்றும் விடுதியில் இருந்த குகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்திய நிலையில், அதற்கு மறுத்ததால் அப்பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். பெரியபாளையம் போலீசார் வழக்கமான ரோந்து மற்றும் விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுதாரித்த இளம்பெண், அவர்களது பிடியிலிருந்து அங்கு வந்த பெரியபாளையம் போலீசிடம் முறையிட்டு இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.

இப்புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் பெண்கள் வன்கொடுமை வழக்கு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற வழக்கு, அசிங்கமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கார்த்திக் (36), குகன் (24) ஆகிய இருவரை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மௌலி என்பவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!