Skip to content
Home » திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

  • by Senthil

திமுக சார்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு மகளிர் தின சிறப்பாக புடவை பரிசாக வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு பேசுகையில், “இது அரசியல் விழாவாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் பெண்களுக்கான விழாவாக ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். இதில் நான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக பங்கேற்று இருக்கிறேன். அவரிடம் நான் பயிற்சி பெற்றது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அவரின் குடும்பத்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். அதுபோல் என் அப்பா எம்ஆர் ராதா மற்றும் கலைஞர் இருவரின் நட்பு அற்புதமானது.. பொதுவாக, இந்த ஆண்களை கெடுப்பதே பெண்கள்தான்.. ஆண்மகனை தயவுசெய்து கெடுத்து விடாதீர்கள். ரொம்ப விழுந்து விழுந்து அவர்களை கவனிப்பதுதான் பிரச்சனையே.. ஏன், அவங்களே சாப்பாடு போட்டுக்கிட்டு சாப்பிட்டால்தான் என்னவாம். எல்லாரையும் கவனிக்க வேண்டும். ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்தானே” என்றார் ராதிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!