மயங்கி விழுந்து பெண் சாவு..
திருச்சி பெரிய கடை வீதி கஜ ராணி தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 40)இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 12 ந்தேதி காளீஸ்வரி வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த காளீஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களிடம் கஞ்சா விற்பனை… 5 பேர் கைது..
திருச்சி பிப் 21- திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மதுரை திருச்சி மெயின் ரோட்டில் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள ஒரு என்ஜினியர் கல்லூரி அருகில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்வதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது இரண்டு வாலிபர்கள் கஞ்சாவுடன் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராம்ஜி நகர் மில்க் . காலனி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ( 32) மதன்மித்ரேன் ( 38) என்பது தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதேபோன்று திருச்சி பீம நகர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முகமது சபீக் ( 23)என்பவர்கஞ்சா விட்டுக் கொண்டிருந்தார்.இதை அடுத்து செசன்ஸ் கோர்ட் போலீசார் முகமது ஷாபிகை கைது செய்து அவரிடமிருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் இதே போன்று எடமலைப்பட்டி புதூரில் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் ( 47) பூபாலன் ( 31)ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.