Skip to content

நான் அரசியலுக்கு வருவேனா?… திருச்சியில் நடிகர் சூரி பேட்டி..

  • by Authour

விடுதலை – 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சூரி, “விடுதலை – 1 படத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்தப் படத்தை கொண்டாடினர். அதேபோல விடுதலை – 2 ஐயும் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. விடுதலை 2 படத்தில் கமர்சியலை தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இந்த படத்தில் இருக்கிறது. விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும். சினிமா ரசிகர்கள் அனைவரும் விடுதலை -2 படத்தை பாருங்கள். இந்த படத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விடுதலை-3 எடுப்பது குறித்து பார்ப்போம்.

அடுத்தடுத்த படங்களில் கதை நாயகனாகவே பயணிப்பேன். விடுதலை-2ல் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் படத்தில் இருப்பேன். விடுதலை 2 படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றிணையக் கூடியதாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளிவருபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும். நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன். யார் அதில் ஹீரோ என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்பொழுதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான். அடுத்து மாமன் என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறேன், அந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் தான் நடந்து வருகிறது” என தெரிவித்தார். அரசியலுக்கு வருவீர்களா என்கிற கேள்விக்கு, திரைத்துறையே நன்றாக தான் இருக்கிறது. இதிலே பயணிப்போம் என்றார்.

error: Content is protected !!