Skip to content
Home » மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

ஆந்திர மாநிலம் கடப்பா நகரின் என்ஜிஓ காலனியில் வசிக்கும் இரண்டாவது நகர காவல் நிலைதத்தில்  ரைட்டராக பணி புரிந்து வந்தவர் வெங்கடேஷ்வர்லு. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு பிடெக் மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள் உள்ளனர். இதுதவிர வெங்கடேஸ்வரலுவிற்கு இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி வரை கடப்பா இரண்டாவது காவல் நிலையத்தில்  பணியில் இருந்தார். வீட்டுக்கு செல்லும்போது  தன்னுடன் இருந்த  துப்பாக்கியை எடுத்து சென்றுள்ளார். பின்னர்  நள்ளிரவில் தனது மனைவி, இரண்டு மகள்களை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இன்று காலை டி.எஸ்.பி. ஷெரிப் தலைமையில்  வீட்டிற்கு சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வெங்கடேஸ்வரலு ஸ்டாப் பேப்பரில் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு கிடைக்கும் பலன்களை, இரண்டாவது மனைவிக்கு வழங்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.,க்கு கடிதம் எழுதி இருந்தார்.

10, Including 2 Children, Found Dead In Vizag In Separate Incidents

இது உண்மையில் அவர் எழுதியதா இந்த தற்கொலையில் இரண்டாவது மனைவி தலையீடு உள்ளதா என விசாரனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ்வர்லு  சில காலமாக குடும்ப தகராறில் இருந்து வந்ததாக சக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்   காவலர் வெங்கடேஸ்வரலு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி சித்தார்த்த கவுஷல் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.  இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!