Skip to content
Home » கரூர்….. மின்வாரிய வாட்ஸ் அப் குழு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

கரூர்….. மின்வாரிய வாட்ஸ் அப் குழு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு

  • by Senthil

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக பொதுமக்களுக்கு மின்தடை  குறித்த தகவல்களை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு  அனைத்து பத்திரிகை ஊடக துறையினரையும் இணைத்து செயல்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய வாட்ஸ் அப் குழுவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் லோகோவை பதிவிட்டு, ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை கண்டவுடன் செய்தியாளர்கள் சார்பில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த தகவலை காவல் துறையினருக்கு தெரிவித்ததை அடுத்து மின்வாரிய வாட்ஸ்அப் குழுவானது ஹேக்  செய்யப்பட்டுள்ளதாகவும், ஆண்ட்ராய்டு ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டாம் எனவும், சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுரைவழங்கினர்.

ஹேக்கர்கள் பிடியில் சிக்கியுள்ள வாட்ஸ்அப் குழுவில் மின்வாரிய உயர் அதிகாரிகள், உதவி பொறியாளர்கள், அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடக துறையினர் பங்கு பெற்றுள்ளனர்.

இது குறித்து விசாரித்ததில் கரூர், வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வரும் பிரபாகரன் என்பவரது, செல்போன் ஹேக் செய்யப்பட்டதால் அவர் இடம் பெற்றுள்ள அனைத்து வாட்ஸ்அப் குழுக்களுக்கும் போலியான ஆண்ட்ராய்டு செயலிகளை ஹேக்கர்கள் அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் மின்வாரிய உதவி பொறியாளர் பிரபாகரனிடம் புகார் மனுவை பெற்று அதன் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!