Skip to content

வாஷிங் பவுடர் விற்பனையாளர் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…

  • by Authour

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (37). இவர் கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் வாஷிங் பவுடர் மற்றும் வாஷிங் சோப் ஆகியவற்றை வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு க.பரமத்தி பகுதியில் வழக்கம்போல் வாஷிங் பவுடர்களை விற்பனை செய்வதற்காக சென்றபோது, ஒரு வீட்டில் மாற்றுத்திறனாளியான இளம் பெண் ஒருவர் தனியாக இருப்பதை அறிந்து,அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்ததும், பயந்து போன ராமச்சந்திரன் உடனடியாக அப்பகுதியில் இருந்து தலைமறைவாகி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம் பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அதே நபர் சின்னதாராபுரம் பகுதியில் வாஷிங் பவுடர்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருவதை பார்த்த அந்தப் பெண்ணின் உறவினர் அவரை செல்போனில் படம் பிடித்து, அந்த பெண்ணுக்கு அனுப்பி உள்ளார். தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தது அவர்தான் என அந்த பெண் உறுதி அளித்ததும், ராமச்சந்திரனை பிடித்து க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராமச்சந்திரனை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!