Skip to content

சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (55). இவரின் மகன் ஹரிதாஸ் (24) என்பவருக்கும், சந்தியா( 20) என்பவருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றது. ஹரிதாஸ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், சென்னை, மாதவரம், காவாங்கரை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு, இவர்கள் 3 பேரும் டூவீலரில், சென்னை மாதவரத்தில் இருந்து திண்டிவனம் சென்றிருந்த நிலையில், நேற்று  3 பேரும் ஒரே  டூவுீலரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது இவர்களின் டூவீலர் நிலை தடுமாறியதில் 3 பேரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது, பின்னால் வந்த அரசு பஸ், சாலையில் விழுந்த சந்தியா மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே சந்தியா பரிதாபமாக பலியானார்.  ஹரிதாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அய்யனாரப்பனுக்கு காலில் எலும்பு முறிவுடன் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால், ஜி.எஸ்.டி., சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலன் விசாரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்தியாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிதாஸ், அய்யனாரப்பன் ஆகியோர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!