Skip to content

கிராமசபை கூட்டம்….பஞ். தலைவரை கண்டித்து…. உறுப்பினர்கள் வெளிநடப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி ஊராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கிராமங்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மனு அளிப்பதற்காக வந்தனர். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வார்டு உறுப்பினர்கள் பொது செலவினம், வரவு செலவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

இதற்கு குண்டவெளி ஊராட்சித் தலைவர் ஜெயந்திதெய்வமணி என்பவர் உரிய பதிலளிக்காமல், இது பற்றி எல்லாம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று வார்டு உறுப்பினர்களை பார்த்து கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த வார்டு உறுப்பினர்கள் 9 பேரும், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து மனு அளிக்க வந்த கிராம மக்கள், மனுவை கொடுப்பதற்கு ஆட்கள் இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!