Skip to content

கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்….. சென்னை மாநகராட்சி சிறப்பு தீர்மானம்

  • by Authour

மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உடல் அடக்கம் செய்ய முடியாது. அதற்கான சட்டம் இல்லை. இதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு உடல் புதைக்க முடியாது. இந்த நிலையில் விஜயகாந்த் குடும்பத்தினர் அவரது உடலை  கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் இன்று செனனை மாநகராட்சியின்  சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. 200  உறுப்பினர்கள் உள்ள சென்னை

மாநகராட்சியில் திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 150க்கும் அதிகமாக உள்ளதால்,   கோயம்பேடு கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் அடக்கம்  செய்ய சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  இதன் மூலம் அவரது உடலை கோயம்பேட்டில் அடக்கம் செய்ய யாரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அது செல்லுபடியாகாது. சட்டச்சிக்கலும் ஏற்படுத்தாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!